ஒருநாளும் தேடாமல் ஓடினேன் கம்பா!
திருநாளம் கிட்டாமல் தேடினேன்! தெம்பாய்
வரும்நாளும் வாய்த்திட வேண்டுகிறேன்! உன்னருளால்
பெருநாளின் பேறுகளைப் பெற்று!
பாட்டெழுத என்னுள் பரவசம்கண் டேன்!எனை
ஆட்கொண்டு மிக்க சுவைக்கவி வேண்டேன்!உன்
தாட்கண்டு நின்றேன்! சிறுசுவையும் தந்திடுக!
மாட்டென்று ஒதுக்க மனத்து