vendredi 31 août 2012

கம்பா அருளுக!




ஒருநாளும் தேடாமல் ஓடினேன் கம்பா!
திருநாளம் கிட்டாமல் தேடினேன்! தெம்பாய்
வரும்நாளும் வாய்த்திட வேண்டுகிறேன்! உன்னருளால்
பெருநாளின் பேறுகளைப் பெற்று!

பாட்டெழுத என்னுள் பரவசம்கண் டேன்!எனை
ஆட்கொண்டு மிக்க சுவைக்கவி வேண்டேன்!உன்
தாட்கண்டு நின்றேன்! சிறுசுவையும் தந்திடுக!
மாட்டென்று ஒதுக்க மனத்து

Aucun commentaire:

Enregistrer un commentaire